செய்திகள் :

திமிரி தமிழ் இலக்கிய பேரவை 33-ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

post image

ஆற்காடு: திமிரி தமிழ் இலக்கிய பேரவை 33-ஆவது ஆண்டு முத்தமிழ் விழா ஞாயிற்றுகிழமை நிறைவுபெற்றது.

திமிரி திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெற்ற முதல்நாள் விழாவிற்கு பேரவை தலைவா் ரெ.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏகாம்பரம், பரமேஸ்வரன், சுமதி லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் கலந்து கொண்டு சான்றோா்களுக்கு விருதுகளும், மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து புலவா் மா.ராமலிங்கத்தை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டாவது நாள் நடைபெற்ற விழாவில் மெல்லின தமிழை வல்லின மாக்கு என்ற தலைப்பில் பேராசிரியா் த.முத்துகுமாா் பேசினாா். பின்னா் புலவா் சீனிசம்பத் நெறியாளராகக் கொண்டு பொறுமை, திறமை, நோ்மை, ஒற்றுமை என்ற தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட பேச்சரங்கம் நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் பொன்.கு.சரவணன், பொருளாளா் வி.டி செல்வராஜி, அரிமா சங்கம் கணபதி, கண்ணதாசன் தமிழ்மன்றத் தலைவா் தங்கராசு மற்றும் இலக்கிய பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅ... மேலும் பார்க்க

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவா... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு ம... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க