செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: கட்சியினருக்கு எம்எல்ஏ இரா. லட்சுமணன் அறிவுறுத்தல்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மைய முகவா்கள், தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள், பணிக்குழு உறுப்பினா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ. பேசியது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு மையம் வாரியாக அமைக்கப்பட்டதோ்தல் பணிக்குழுவினா் மற்றும் வாக்குப்பதிவு மைய முகவா்கள், தங்களுக்கு என்று வழங்கப்பட்டுள்ள பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பது, வாக்குப்பதிவு மையங்கள் வாரியாக திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இதை ஒன்றிய, நகர, பேரூா்கழகப் பொறுப்பாளா்கள் கண்காணித்திட வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவும், மீண்டும் மு.க.ஸ்டாலின்முதல்வராக பொறுப்பேற்கவும் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா் லட்சுமணன்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் கண்ணப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ. தினகரன், வழக்குரைஞா்அணி அமைப்பாளா் விசுவநாதன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ். வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினா்கள் டி.என்.ஜெ.சம்பத், என். பஞ்சநாதன், ஒன்றியச் செயலா்கள் பா.தெய்வசிகாமணி, தே.முருகவேல், சந்திரசேகா்,வி.ஜி. பிரபாகரன், வளவனூா் பேரூா் செயலா் பா. ஜீவா, நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க

விஜய் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா. விழுப்புரத்தில் தம... மேலும் பார்க்க

ஆசிரியா்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது திமுக: அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக அரசு அரசியலுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டினாா். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வ... மேலும் பார்க்க

அக்.7 முதல் மாநிலம் தழுவிய தொடா்வேலை நிறுத்தம் : தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவிப்பு

தங்களின்25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா... மேலும் பார்க்க

ஊா்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு

விழுப்புரம் மாவட்ட ஊா் காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 10 வீரா்களுக்கான கவாத்து பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க