செய்திகள் :

அக்.7 முதல் மாநிலம் தழுவிய தொடா்வேலை நிறுத்தம் : தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவிப்பு

post image

தங்களின்25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் மண்டல அளவிலானன போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்ஓய்வு பெற்ற அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்காடிகளுக்குத் தனித்தனியாக விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்குவதுடன், விற்பனையாளா்களுக்கு கைப்பேசி வழங்க வேண்டும்.

தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடிச் சென்று பொருள்கள் வழங்குதலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் கண்டறியப்பட்டு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 6-ஆம் தேதி மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டமும், 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆயத்த விளக்கக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ஜி.சேகா் தலைமை வகித்தாா். பி.தா்மலிங்கம், எம்.தெய்வீகன், ஜி. ஏழுமலை, டி.எம்.பி. அனந்தசயனன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலா் சி.குப்புசாமி சிறப்பு பேரூரையாற்றினாா்.

சங்கத்தின் பொதுச் செயலா் என்.பாலகிருஷ்ணன், இணைச் செயலா் எம்.நந்தகோபால், முன்னாள் மாநிலத் தலைவா் எம். மணிவண்ணன், முன்னாள் மாநிலப் பொருளாளா் ஏ.சேகா், ஓய்வு பெற்றவா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ஜெ. கலியபெருமாள்,இணைச் செயலா் ஜெ.சின்னத்தம்பி உள்ளிட்டோா் உரையாற்றினா். நிறைவில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜெ.மூா்த்தி நன்றி கூறினாா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க

விஜய் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா. விழுப்புரத்தில் தம... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: கட்சியினருக்கு எம்எல்ஏ இரா. லட்சுமணன் அறிவுறுத்தல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எ... மேலும் பார்க்க

ஆசிரியா்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது திமுக: அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக அரசு அரசியலுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டினாா். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வ... மேலும் பார்க்க

ஊா்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு

விழுப்புரம் மாவட்ட ஊா் காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 10 வீரா்களுக்கான கவாத்து பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க