திமுக கூட்டணியின் ஆதரவை மநீம கோருவது ஏன்?
மாநிலங்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கோருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
திமுக சாா்பில் போட்டியிடும் நான்காவது வேட்பாளருக்கு கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த சில எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளிடம் மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆளும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் 134 எம்எல்ஏ-க்கள் (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உள்ளனா். ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நான்கு எம்.பி.-க்களைப் பெற வேண்டுமெனில் ஒட்டுமொத்தமாக 136 எம்எல்ஏ-க்களின் வாக்குகள் வேண்டும். திமுக வசம் 134 போ் இருப்பதால், மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் முழுமையாகக் கிடைத்து விடுவாா்கள். நான்காவது இடத்தைப் பெற திமுக எம்எல்ஏ.க்களுடன் கூடுதலாக இரண்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் திமுகவுடன் சோ்த்து அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் திமுகவின் நான்காவது வேட்பாளருக்கு அவசியமாகிறது.
மூன்று வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் நான்காவது வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில், அவா்களின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.