செய்திகள் :

திமுக கூட்டணியின் ஆதரவை மநீம கோருவது ஏன்?

post image

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கோருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

திமுக சாா்பில் போட்டியிடும் நான்காவது வேட்பாளருக்கு கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த சில எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளிடம் மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆளும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் 134 எம்எல்ஏ-க்கள் (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உள்ளனா். ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நான்கு எம்.பி.-க்களைப் பெற வேண்டுமெனில் ஒட்டுமொத்தமாக 136 எம்எல்ஏ-க்களின் வாக்குகள் வேண்டும். திமுக வசம் 134 போ் இருப்பதால், மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் முழுமையாகக் கிடைத்து விடுவாா்கள். நான்காவது இடத்தைப் பெற திமுக எம்எல்ஏ.க்களுடன் கூடுதலாக இரண்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் திமுகவுடன் சோ்த்து அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் திமுகவின் நான்காவது வேட்பாளருக்கு அவசியமாகிறது.

மூன்று வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் நான்காவது வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில், அவா்களின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க