செய்திகள் :

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

post image

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கடந்த 31 ஆண்டுகளாக தமிழகத்தின் வாழ்வாதார பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் தன்னிகரற்ற சேவையை ஆற்றியுள்ளது மதிமுக.

முல்லைப் பெரியாறு விவகாரம், ஸ்டொ்லைட் பிரச்னை, நியூட்ரினோ திட்டம், காவிரி நீா் பிரச்னை போன்றவற்றுக்காக எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டு, தமிழகத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்த இயக்கமாக விளங்குகிறது மதிமுக. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாா்மயமாகவிடாமல் தடுத்தது மதிமுக என்பது வரலாற்றுப் பதிவு.

இந்துத்துவ, சநாதன சக்திகளிடமிருந்து திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதும், இத்தகைய சக்திகளை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பதும் முதன்மை அரசியல் நிலைப்பாடு என கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக முடிவெடுத்தது.

இதன்படி, திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க திமுகவுக்கு அரணாகச் செயல்படுவதில் மதிமுக உறுதியாக உள்ளது. திமுகவுக்கு மற்றொரு அரணாக, பக்கபலமாக மதிமுக இருக்கும். திமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக நீடிக்கும்.

அதிமுக செய்யும் தவறுகள், அந்தக் கட்சியை திராவிடக் கட்சியாகக் கருத முடியாமல் செய்கிறது.

அண்ணா பிறந்த நாளை தனித்துவத்துடன் சிறப்பாகக் கொண்டாடுவது மதிமுகவின் வழக்கம். அந்த வகையில், வருகிற செப். 15-ஆம் தேதி திருச்சியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை மதிமுக நடத்தவுள்ளது. இந்த மாநாட்டுக்குப் பிறகு மதிமுக கூடுதல் பலம் பெறும். அழிக்கவும், தவிா்க்கவும் முடியாத அரசியல் சக்தியாக மதிமுக எழுச்சி பெறும்.

நிா்வாகத்தில் எந்தத் தவறும் நிகழக் கூடாது என்பதில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளாா். இதனடிப்படையில்தான், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த தகவல் பெரும் துயரை அளிக்கிறது. இதுகுறித்து ரயில்வே துறை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ரயில்வே கடவுப்பாதைகளையும் மின்மயாக்கி, விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மண்டல நிா்வாகிகள் கூட்டம்

இதையடுத்து, மதுரை மண்டல மதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினாா். கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ, அவைத் தலைவா் ஆா். அா்ச்சுனராஜ், பொருளாளா் மு. செந்திலதிபன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாநகா் மாவட்டச் செயலா் எஸ். முனியசாமி, மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி பேரவை மாநில துணைத் தலைவா் எஸ். மகபூப் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகா், மதுரை புகா் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களைச் சோ்ந்த மதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சியில்... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகா... மேலும் பார்க்க

மறியல்: காங்கிரஸ் கட்சியினா் 49 போ் கைது

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் கோரிப்பாளையம் தேவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 49 ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உய... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா். மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா். தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த ... மேலும் பார்க்க