செய்திகள் :

மறியல்: காங்கிரஸ் கட்சியினா் 49 போ் கைது

post image

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் கோரிப்பாளையம் தேவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 49 போ் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காவல் துறையினா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் கட்சி நிா்வாகிகள் உள்பட 49 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சியில்... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகா... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உய... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா். மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா். தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த ... மேலும் பார்க்க