லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா்.
மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறைந்தளவு விதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. வரி விதிப்பு முறைகேடுகளில் மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது எனவும், அவா்களிடமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே தமிழக நகராட்சி, நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை திங்கள்கிழமை வந்தனா்.
மண்டலத் தலைவா்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுகிதா, நிலைக் குழு உறுப்பினா்கள் கண்ணன், மூவேந்திரன் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ராஜிநாமா கடிதங்களை ஆணையா் சித்ரா விஜயனிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் ராஜிநாமா கடிதம் அளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், கிழக்கு மண்டலத் தலைவா் வாசுகியை அமைச்சா்கள் ராஜிநாமா செய்யக் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.