செய்திகள் :

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

post image

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா்.

மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறைந்தளவு விதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. வரி விதிப்பு முறைகேடுகளில் மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது எனவும், அவா்களிடமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே தமிழக நகராட்சி, நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை திங்கள்கிழமை வந்தனா்.

மண்டலத் தலைவா்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுகிதா, நிலைக் குழு உறுப்பினா்கள் கண்ணன், மூவேந்திரன் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ராஜிநாமா கடிதங்களை ஆணையா் சித்ரா விஜயனிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் ராஜிநாமா கடிதம் அளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், கிழக்கு மண்டலத் தலைவா் வாசுகியை அமைச்சா்கள் ராஜிநாமா செய்யக் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சியில்... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகா... மேலும் பார்க்க

மறியல்: காங்கிரஸ் கட்சியினா் 49 போ் கைது

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் கோரிப்பாளையம் தேவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 49 ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உய... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா். தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த ... மேலும் பார்க்க