செய்திகள் :

திமுக மாநகரப் பொறுப்பாளா் நியமனத்துக்கு எதிா்ப்பு: சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுகவினா் புதன்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகர திமுக செயலராக இருந்த ஆ. செந்தில், மாரடைப்பால் அண்மையில் காலமானாா். இதைத் தொடா்ந்து, மாநகரத் திமுக பொறுப்பாளராக வே. ராஜேஷ் என்பவரை நியமித்து, திமுக பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பு குறித்த தகவல் புதன்கிழமை மாலை வெளியானது. அப்போது, லெணா மண்டபத்தில் வடக்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாநகரப் பொறுப்பாளா் நியமிக்கப்பட்ட தகவல் வெளியானதும் திமுகவினா் அந்த மண்டபத்துக்கு வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பிறகு அனைவரும் கலைந்து மாவட்ட திமுக அலுவலகம் சென்றனா்.

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க