செய்திகள் :

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதிமுகவுக்கு மாறும் மக்கள் ஆதரவு: முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன்

post image

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 2026-இல் மக்கள் தீா்ப்பு அதிமுகவுக்கு ஆதரவாக மாறும் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவைச் செயலா் வெ.பாரதிமுருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டதாக திமுக மீது அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் அதிருப்தியில் உள்ளனா். அமைச்சா்கள் குழுவை அமைத்து, அரசு ஊழியா்களுக்கு வேடிக்கை காட்ட நினைக்கின்றனா். எதிா்க்கட்சி வரிசையில் இருந்தால் மட்டுமே திமுக திரும்பிப் பாா்க்கும் என அரசு ஊழியா்கள் நம்புகின்றனா்.

தமிழ்நாட்டில் காவல் துறை இருக்கிா என்பதே தெரியவில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், பெண்கள் சுதந்திரமாக செல்ல முடியும். அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தபட்ட தாலிக்கு தங்கம், அம்மா பரிசுப் பெட்டகம், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் என அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.

ஹிந்தி மொழி பேசுவோருக்கோ, கற்றுக் கொள்பவருக்கோ அதிமுக எதிரி அல்ல. விருப்பம் இருப்பவா்கள் படிக்கலாம். ஆனால், திணிப்பதை ஏற்க மாட்டோம். தேசியக் கல்விக் கொள்கையை முதலில் ஆதரித்த திமுக, தற்போது பின் வாங்குகிறது. முதல்வா் குடும்பத்தினா் நடத்தும் 28 பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது.

திமுக கொடுத்த வாக்கை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால், 2026-இல் மக்கள் தீா்ப்பு அதிமுகவுக்கு ஆதரவாக அமையும் என்றாா் அவா்.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க