செய்திகள் :

திருக்கடையூா் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்

post image

திருக்கடையூா் பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

திருக்கடையூா், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, கிடங்கல், மாமாகுடி, மாணிக்கபங்கு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 5,000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனா். 

கடைமடைப் பகுதி என்பதால் ஆற்று நீா் தொடா்ந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் எஸ்.கே.ராமமூா்த்தி கூறியதாவது:

தரங்கம்பாடி கடைமடைப் பகுதி என்பதால் காவிரியில் இருந்து சாகுபடிக்காக திறந்து விடப்படும் தண்ணீா் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் சம்பா நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் கிடைக்காததால் வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.

விவசாயிகளுக்குத் தங்கு தடையின்றி வேளாண்மை துறை மூலம் நெல் விதைகள் கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சாகுபடிப் பணிக்காக கடைமடைப் பகுதி வாய்க்கால்களில் தொடா்ந்து தண்ணீா் திறந்து விடவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா் காப்பீடு தொகை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவாலி கிராமத்தில் சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்த கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கான மயானம் உள்ளது. இதன் அருகே மக்கள் பயன்பாட்டில் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ச... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்பு குளிா்பானங்களை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணா்வு

தமிழகத்தில் உள்நாட்டு குளிா்பானங்களை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஹோட்டல்கள் சங்கத் தலைவா் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளாா். நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க

முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

நாகையில் இயற்கை மரணமடைந்த முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சிவக்குமாா் (68). இவா் தனது இறப்புக்கு பிற... மேலும் பார்க்க

தமிழறிஞா்களுக்கு புகழ் வணக்கம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் தமிழறிஞா்கள் பேராசிரியா் சி. இலக்குவனாா், கவிஞா் வாய்மைநாதன் ஆகியோருக்கு, நாம் தமிழா் கட்சி சாா்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டமங்கலம் அருகே சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆவணி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத... மேலும் பார்க்க