செய்திகள் :

திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்

post image

மாசித் தேரோட்டத்தை முன்னிட்டு, உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகின்றன.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்தத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரா்கள் மூலமாக சுவாமி, அம்மன் ஊா்வலமாக நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை கோயில் மண்டபத்தில் நடைபெறுகிறது.

தேரோட்டம்: திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் ரதம் ஊா்வலமும், காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சுந்தரி, தக்காா் நாராயணி, கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற இளைஞா் உயிரிழந்தாா். கெங்குவாா்பட்டி ராமா்கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தவப்பாண்டி (27). தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த தொந்தி மகன் குமாா் (52). மேலச்சொக்கநாதபுரத்தில... மேலும் பார்க்க

வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க யோசனை

கோடை காலத்தில் கால்நடைகளை வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து பாதுகாக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் யோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

வருஷநாடு மலைப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ பற்றியது. கோடை வெப்பம் தற்போது தேனி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால், வருஷநாடு அருகேயுள்ள முருக... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

போடியில் நகர திமுக செயலா் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் சங்கா், பொதுக்குழு உறுப்பினா் ராஜா ரமேஷ், தேனி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆசிப்... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

போடியில் திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.போடி வஞ்சி ஓடைத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (56). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தாா். இதனால், மனமுடைந்து... மேலும் பார்க்க