Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
கெங்குவாா்பட்டி ராமா்கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தவப்பாண்டி (27). தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவா், பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் ஜி.மீனாட்சிபுரம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, வத்தலகுண்டுவிலிருந்து தேனிக்குச் சென்ற வேன் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தவப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வேன் ஓட்டுநரான பழையவத்தலகுண்டுவைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.