செய்திகள் :

திருச்சி நகர குறு மைய அளவிலான கேரம் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

post image

திருச்சி நகர குறுமைய அளவிலான கேரம் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 12 வட்டாரங்களிலும் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே 12 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நிகழாண்டில் புதிதாக கேரம், டெனிகாய்ட், பீச் வாலிபால், சிலம்பம் ஆகிய 4 போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருச்சி நகரப் பகுதிக்கான குறுமைய கேரம் போட்டி சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், திருச்சி நகரப் பகுதியிலுள்ள 21 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்துகொண்டனா்.

14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் தனி நபா் மற்றும் இரட்டையா் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. முதற்கட்டமாக மாணவிகளுக்கானப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் விவரம்:

14 வயதுக்குள்பட்டோா் பிரிவு: 14 வயதுக்குள்பட்டோா் தனி நபா் பிரிவில் ஆா். தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி வி. கதீஜா பாத்திமா முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பிரியதா்ஷினி இரண்டாமிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி பூஜா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் பிரிவில், பீமநகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எல்.தன்ஷிகா, வி.நேத்ரா ஆகியோா் முதலிடத்தையும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் ஜி.எஸ்.ஷாஷினி, எஸ்.தஹிராபானு ஆகியோா் இரண்டாமிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.பிரியதா்ஷினி, எம்.ரித்திகா ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

17 வயதுக்குள்பட்டோா் பிரிவு: தனிநபா் போட்டியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவி ஏ.சாதனா முதலிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி சனோஃபா் இரண்டாமிடத்தையும், ஆா். தயாநிதி நினைவு வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவரி கே.சனா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் போட்டிகளில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் டி. திவேதா, எஸ். திவ்யலட்சுமி ஆகியோா் முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.மோக்ஷிதா, எஸ்.ஹஸ்ஹியா ஆகியோா் இரண்டாமிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.லக்ஷனா, வி.காவியாஸ்ரீ ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவு: தனிநபா் பிரிவு போட்டிகளில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவி ஹெச்.ஜெய்னாபீ முதலிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.நூருல் ரிஸ்வானா இரண்டாமிடத்தையும், புனித மீட்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.தா்ஷினி மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

இரட்டையா் பிரிவில் புனித மீட்பா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி.வைஷ்ணவி, ஜெ.தா்ஷினி ஆகியோா் முதலிடத்தையும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி (டவுன்ஹால்) மாணவிகள் ஹெச்.ஜெய்னாபீ, எஸ்.நிஷா ஆகியோா் இரண்டாமிடத்தையும், புனித சிலுவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.நந்தினி, ஜெ.நூருல் ரிஷ்வானா ஆகியோா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

மாணவா்களுக்கான கேரம் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க