திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதி சாவு
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள சாலியமங்கலம், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மா. ராஜேஷ் (46). இவா் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் 2013 அக்டோபா் 2 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் சிறை வளாகத்தில் திடீரென மயங்கினாா். இதையடுத்து முதலுதவிக்குப் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ராஜேஷை கொண்டு சென்றபோது அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறை அதிகாரி விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.