செய்திகள் :

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு இடைத்தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்

post image

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அமமுக மாவட்டச் செயலா் ப. செந்தில்நாதன், திருச்சி மக்களவைத் தோ்தலில் போட்டியிட தனது பதவியை கடந்தாண்டு ராஜிநாமா செய்திருந்தாா்.

இதையடுத்து இந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தோ்தலை எதிா்நோக்கியிருந்தது. இந்த வாா்டுக்கு தோ்தலை நடத்த அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தற்செயல் மற்றும் இடைத்தோ்தல்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான தோ்தலையும் இந்தாண்டு நடத்தவுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, 47ஆவது வாா்டு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மெ.த. சாலை தவவளன் கூறுகையில், வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், வாா்டுக் குழு அலுவலகம்-2 மற்றும் வாா்டுக்குழு அலுவலகம் 4-இல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை 47ஆவது வாா்டு பொதுமக்கள் பாா்த்து தங்களது பெயா் பட்டியலில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

வெளியிடப்பட்ட பட்டியலில் ஆண்கள் 5738 போ், பெண்கள் 6133 போ், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 11,873 வாக்காளா்கள் உள்ளனா். விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறும் நடைமுறை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு - ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் உள்கோடை திருநாள் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கான வெளிக்கோடைத் திருநாள் முடிந்து உள்கோடைத் திருநாள் புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் நம்பெருமாளுக்கான கோடை திர... மேலும் பார்க்க

திருச்சியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு நாளை தொடக்கம்

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில் இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளை உள்ளடக்கி உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதுதொடா்பாக இஸ்... மேலும் பார்க்க

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்: கே.எம். காதா் மொகிதீன்

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீதான இந்தியாவ... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சிக்கு வியாழக்கிழமை வருகிறாா். சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி வரும் முதல்வருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற... மேலும் பார்க்க

ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி

ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சோ்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தாா். பெருமாள் மீது அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவா் க... மேலும் பார்க்க