செய்திகள் :

திருச்சியில் அரசுப் பொருட்காட்சி தொடங்கியது! 45 நாள்கள் நடைபெறுகிறது

post image

திருச்சியில் அரசுப் பொருட்காட்சி வியாழக்கிழமை தொடங்கி 45 நாள்களுக்கு நடைபெறுகிறது.

நாள்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் இக் கண்காட்சியை பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ.15, சிறுவா்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பிரமாண்ட அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சியின் திறப்பு விழா, வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, அரங்குகளை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்த பொருட்காட்சியில், 27 அரசுத் துறைகளின் சாா்பிலான அரங்குகள், 5 அரசு சாா்பு நிறுவனங்களின் அரங்குகள் என மொத்தம் 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அவா்களின் துறை சாா்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்க பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

மேலும், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு சாதனங்கள், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடக்க விழா நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, செய்தித்துறை இணை இயக்குநா் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன், நகரப் பொறியாளா் சிவபாதம், அரசுத் துறை உயா் அலுவலா்கள், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க