செய்திகள் :

திருச்சியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்!

post image

திருச்சியில் ஜூலை 26ல் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார். பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து ஜூலை 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்த பின்னர் ஜூலை 27 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.

அதற்காக பிரதமர் மோடி, தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் 30 நிமிடங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவான பின்னர் பிரதமர் மோடியை இபிஎஸ் முதல்முறையாகச் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்காகதான் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண பிரசாரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வருகிற ஜூலை 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லவிருந்த நிலையில் அது ஜூலை 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக பயணத்தின்போது பிரதமரைச் சந்திக்க மேலும் 12 பேர் நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியில், தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reports says that AIADMK General Secretary Edappadi Palaniswami will meet Prime Minister Modi on July 26 in Trichy airport

இதையும் படிக்க | காஸாவில் கடந்த 3 நாள்களில் பசியால் 21 குழந்தைகள் மரணம்!

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்– பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ந... மேலும் பார்க்க

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க