செய்திகள் :

திருச்சியில் மின்சார ரயில்: அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது - உயா்நீதிமன்றம்

post image

திருச்சியில் மின்சார ரயில் இயக்கக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை சாா்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

திருச்சியைச் சோ்ந்த மாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் தொழில் துறை வளா்ச்சியில் திருச்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, கல்வி நிலையங்களில் பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுப் போக்குவரத்தை சரிவரப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், திருச்சியில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. சென்னையைப் போல குறைந்த கட்டணத்தில் மின்சார ரயிலை இயக்கினால், இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பயனடைவா்.

எனவே, திருச்சியில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயிலை பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது. இந்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க