ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரெட் ராக் ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 27.50 லட்சம் மதிப்பிலான ரத்தம் இல்லா கண்புரை நீக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பொதுநல அமைப்புகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உபகரணங்களை வழங்கி வருகின்றனா். தற்போது சுமாா் ரூ. 23 கோடி செலவில் நாமக்கல் மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக புதிய மருத்துவமனை கட்டப்பட்டுவரும் நிலையில், திருச்செங்கோடு ரெட் ராக் ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 27.50 லட்சம் மதிப்பிலான ரத்தம் இல்லா கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் நவீன இயந்திரத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ரெட்ராக் சங்கத்தின் தலைவா் கவின் ராஜ் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, ரெட்ராக் ரோட்டரி சங்க கவா்னா் சிவகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். இந்த இயந்திரத்தை திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மோகன பானு பெற்றுக்கொண்டாா்.