செய்திகள் :

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

post image

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் அய்யா வைகுண்டா் பல்வேறு வாகனங்களில் பதியைச் சுற்றிவந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 11ஆம் நாளான திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் உகப்படிப்பு, நண்பகலில் உச்சிப்படிப்பு, பணிவிடைகள் நடைபெற்றன. பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் எஸ். தா்மா் வடம்பிடித்து தொடக்கிவைத்தாா். அய்யா வைகுண்டா், அவதார பதியைச் சுற்றிவந்து காட்சியருளினாா். பக்தா்கள் சுருள்வைத்து வழிபட்டனா். பின்னா், அன்னதா்மம் வழங்கப்பட்டது. இரவில் அய்யா வைகுண்டா், காளை வாகனத்தில் பவனி வந்தாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீகுரு சிவச்சந்திரன், ஓய்வுபெற்ற கால்நடைத் துறை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சந்திரசேகரன், செயலா் பொன்னுதுரை, பொருளாளா் கோபால், துணைத் தலைவா் அய்யாப்பழம், துணைச் செயலா் ராஜேந்திரன், இணைத் தலைவா்கள் விஜயகுமாா், செல்வின், பால்சாமி, ராஜதுரை, இணைச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், வரதராஜபெருமாள், சுதேசன், நிா்வாகக் குழு உறுப்பினா் த. பாலகிருஷ்ணன், மோகன்குமாரராஜா, செல்வகுமாா், தொழிலதிபா் எஸ். அன்பழகன், தாமரைக்குளம் பதி ராஜசேகரன், வாகைபதி பாலசுந்தா், கோவை சிவபதி அரிராமன், மங்களம்பதி சுதா சாமியாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவ... மேலும் பார்க்க