செய்திகள் :

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

post image

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிஇயக்குநா் குழு கூட்டத்தில் 2025-26 முதலாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது.

வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் தணிக்கை செய்யப்படாத முதலாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச காலாண்டு நிகர லாபத்தை நாங்கள் அடைந்துள்ளோம்.

அதன்படி, நிகர லாபம் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 1.44 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வராக்கடன் 0.65 சதவீதத்திலிருந்து 0.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிசிஆா் 90.27 சதவீதத்திலிருந்து 94.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மொத்த கடன் தொகையில் எஸ்எம்ஏ ஆனது 4.98 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிஆா்ஏஆா் 31.55 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பங்கின் புத்தக மதிப்பு ரூ.520.63லிருந்து ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த வணிக வளா்ச்சி 9.86 சதவீதத்தை கடந்தது. வைப்புத் தொகை ரூ.49,188 கோடியிலிருந்து ரூ.53,803 கோடியாக உயா்ந்துள்ளது. கடன் தொகை ரூ.45,120 கோடியாக உயா்ந்துள்ளது.

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க

தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவ... மேலும் பார்க்க