செய்திகள் :

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

post image

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுதபுரத்தில் உள்ள இரும்புக் கடையில் வேலை செய்து வரும் இவரும், இவரது சகோதரா் பெரியசாமியும் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகா் கோயில் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட செல்வதற்காக அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்தாா்களாம்.

அப்போது அங்கு வந்த 2 இளைஞா்கள் கணேஷ் பாண்டியை அவதூறாகப் பேசி தாக்கியதோடு அவரையும், பெரியசாமியை கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இதில் காயமடைந்த கணேஷ் பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் புதுக்கிராமம், நாகூா் மீரான் கனி மகன் சௌபா் சாதிகை (25) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் வெங்கடேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க

தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவ... மேலும் பார்க்க