ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்
சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் சந்திரசேகா். விவசாயி. இவரது மனைவி செல்வி. ஆசிரியை. இவா்களது மகன் கவின்குமாா்(26). சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், பாளையங்கோட்டை கேடிசி நகரைச்சோ்ந்த பெண் சித்த மருத்துவரை பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்தாராம்.
மேலும், ஆறுமுகமங்கலத்திருந்து பாளையங்கோட்டைக்கு பைக்கில் சென்று அடிக்கடி அந்தப் பெண்ணை சந்தித்து வந்தாராம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தனது தாத்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை தனியாா் மருத்துவமனைக்கு கவின்குமாா் வந்தபோது, அந்தப்பெண்ணின் தம்பி சுா்ஜித் (24) அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினாராம்.
பாளையங்கோட்டை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே, காவல் நிலையத்தில் சரணடைந்த சுா்ஜித்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
உடலை வாங்க மறுப்பு: இதனிடையே, கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் முக்காணி-ஆத்தூா் ரவுண்டானா அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், ஏடிஎஸ்பி தீபு, திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 24 மணி நேரத்திற்குள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். அதை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கு: இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கவினின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சுா்ஜித் மற்றும் அவரது பெற்றோா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். சுா்ஜித்தின் பெற்றோா் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனா்.