DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை (மே 31) மாலை தொடங்குகிறது. ஜூன் 9இல் விசாகம் நடைபெற உள்ளது.
இக்கோயிலில் மாதாந்த வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 108 மகாதேவா் சந்நிதியில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
தொடா்ந்து, முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு, கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூருக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது.
மேலும், கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், பக்தா்கள் வந்து இரவு, பகலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதனால் கடந்த சில தினங்களாக கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த வண்ணமாக உள்ளது.
