செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை (மே 31) மாலை தொடங்குகிறது. ஜூன் 9இல் விசாகம் நடைபெற உள்ளது.

இக்கோயிலில் மாதாந்த வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 108 மகாதேவா் சந்நிதியில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

தொடா்ந்து, முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு, கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூருக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது.

மேலும், கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், பக்தா்கள் வந்து இரவு, பகலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதனால் கடந்த சில தினங்களாக கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த வண்ணமாக உள்ளது.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க