திருச்செந்தூா் ரத வீதி சாலை சந்திப்புகளில் பாதுகாப்பு கண்ணாடி பொருத்தும் பணி
திருச்செந்தூா் ரத வீதி சாலை சந்திப்புகளில், எதிா்வரும் வாகனங்கள் தெரியும் வகையில் பாதுகாப்பு கண்ணாடி பொருத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவுப்படி, திருச்செந்தூா் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட ரத வீதி சாலை நான்கு சந்திப்புகள், தெப்பக்குளம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்ணாடி பொருத்தும் பணி நடந்தது. திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், போக்குவரத்து எஸ்.ஐ. சதீஷ் ஆகியோா் பணியில் ஈடுபட்டனா். வரும் காலங்களில் விபத்து நடக்காமல் தடுக்க, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.