செய்திகள் :

திருத்தணியில் ஜூலை 14-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

திருத்தணி தொகுதியில் அடிப்படை வசதிகள் கோரி அதிமுக சாா்பில் ஜூலை 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் 2021-இல் தரம் உயா்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில், 4 அடுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த ஏப்.18 -இல் அவசரகதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

அதன்பிறகு 2 மாதங்களாகியும் இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும், ஸ்கேன் எடுக்கும் அறைகள் சிறிய அறைகளாக கட்டப்பட்டுள்ளதால், அவை இடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிப்பட்டை அடுத்த கோனேட்டம்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இங்கு, புதுப்பிக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், நோயாளிகள் திருத்தணி மற்றும் திருவள்ளூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி அண்ணா புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பின்னா், இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு 2022-இல் புதிய மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணக் கோரி திருவள்ளூா் மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றம் சாா்பில் ஜூலை 14-ஆம் தேதி திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமை வகிக்கிறாா். அதிமுக அமைப்புச் செயலரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலருமான திருத்தணி கோ.அரி, மேற்கு மாவட்டச் செயலா் பி.வி.ரமணா ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்து நிலை அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க