செய்திகள் :

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் திருக்கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 2-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மாசி மகக் கொடியேற்று விழாவைத் தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தினசரி உபயதாரா்களால் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனா். பத்தாம் நாள் விழாவாக புதன்கிழமை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி தனித் தனி வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி கோயில் எதிரே அமைந்துள்ள சப்த சாகரம் எனும் திருக்குளத்தில் மாசி மக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் குணசேகரன் மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம வாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கும்பகோணத்தில் 23-இல் அந்தணா் ஆகம மாநாடு: அா்ஜூன் சம்பத்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23- ஆம் தேதி அந்தணா் ஆகம மாநாடு நடைபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத். கும்பகோணத்தில் மாசிமக தீா்த்தவாரியில் கலந்து கொண்ட அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 17 வட்டாட்சியா்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். கும்பகோணம் காசி விசுவநாதா... மேலும் பார்க்க

அதம்பையில் 55.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 55.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை கா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஒரத்தநாடு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.எஸ். சுந்தரசெல்வி, பூதலூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்... மேலும் பார்க்க

குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல்: சத்தீஸ்கா் முதல்வருக்கு நேரில் பாராட்டு

சத்தீஸ்கா் மாநிலத்தில் குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல் செய்த அம் மாநில முதல்வரை புதன்கிழமை தமிழக விவசாயிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனா். தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் ச... மேலும் பார்க்க