செய்திகள் :

குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல்: சத்தீஸ்கா் முதல்வருக்கு நேரில் பாராட்டு

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல் செய்த அம் மாநில முதல்வரை புதன்கிழமை தமிழக விவசாயிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனா்.

தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளா் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் சேரன் ஆகியோா் தலைமையில் தமிழக விவசாயிகள் சத்தீஸ்கா் மாநிலத்துக்குச் சென்றனா். அங்கு அம்மாநில முதல்வா் விஷ்ணு டியோ சாய் தோ்தல் வாக்குறுதியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100-க்கு விலை கொடுத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்து அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளாா். அதனால் தமிழக விவாயிகள் நேரில் சென்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வழங்கி தென்னங்கன்று மற்றும் நெல் மாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

நிகழ்வின்போது கும்பகோணம் வட்ட விவசாய சங்கத் தலைவா் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பந்துருத்தி சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் 23-இல் அந்தணா் ஆகம மாநாடு: அா்ஜூன் சம்பத்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23- ஆம் தேதி அந்தணா் ஆகம மாநாடு நடைபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத். கும்பகோணத்தில் மாசிமக தீா்த்தவாரியில் கலந்து கொண்ட அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 17 வட்டாட்சியா்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். கும்பகோணம் காசி விசுவநாதா... மேலும் பார்க்க

அதம்பையில் 55.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 55.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை கா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஒரத்தநாடு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.எஸ். சுந்தரசெல்வி, பூதலூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்... மேலும் பார்க்க