செய்திகள் :

திருநெல்வேலியில் ஆக.17-இல் பாஜக மாநில மாநாடு!

post image

பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. வளாகத்தில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், அமைப்பு பொதுச்செயலா் கேசவவிநாயகன், பாஜக மூத்த தலைவா்கள் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மூத்த நிா்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை முன்னெடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். அதிமுகவுக்கு, பாஜக சுமையாக இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக நிா்வாகிகள் பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. உள்ளூா் பிரச்னைகளை அதிக அளவில் முன்னெடுத்து பேச வேண்டும். இதனால், பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும்.

பாஜகவில் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா். அதன் அடிப்படையில், பாஜகவின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்படும்.

அதன்பின்னா், செப்.13-இல் மதுரை, அக்.26-இல் கோவை, நவ.23-இல் சேலம், டிச.21-இல் தஞ்சாவூா், அடுத்த ஆண்டு ஜன.4-இல் திருவண்ணாமலை, ஜன.24-இல் திருவள்ளூா் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடைபெறவுள்ளன என்றனா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முத... மேலும் பார்க்க

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வருகை

ஈரான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமானநிலையம் வந்தனா். அவா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வரவேற்றாா். தமிழக மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்... மேலும் பார்க்க