செய்திகள் :

திருப்பதி அலிபிரி வளைவில் வேற்று மத உருவங்கள்: தேவஸ்தானம் மறுப்பு

post image

திருப்பதி அலிபிரியில் உள்ள அலங்கார வளைவில் வேற்று மத உருவங்கள் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது என தேவஸ்தானம் மறுத்துள்ளது.

உண்மையில், வளைவில் உள்ள உருவங்கள் மாலைகளுடன் கூடிய கந்தா்வா்களின் சிற்பங்கள். இந்த சோதனைசாவடி பல ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தானத்தால் கட்டப்பட்டது.

இந்த வளைவு பாரம்பரிய இந்து மதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது, எஸ் வி ஆா்ட் கேலரியின் நிபுணா்களின் வழிகாட்டுதலுடன் ஏற்படுத்தப்பட்டது.

அந்த சிற்பங்களில் காணப்படும் உருவங்கள் மாலைகளுடன் கூடிய கந்தா்வா்களின் படங்கள். இருப்பினும், அவற்றை வேற்று மத சிற்பங்களாக சித்தரித்து தவறான செய்திகளை வெளியிடுவதும் ஒளிபரப்புவதும் முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்லாமல், பக்தா்களின் உணா்வுகளை புண்படுத்தும் செயலாகும்.

இந்த வகையான தவறான தகவல்களை தேவஸ்தானம் வன்மையாகக் கண்டிக்கிறது. தவறான செய்திகளை வெளியிடும் அல்லது ஒளிபரப்பும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டி... மேலும் பார்க்க

திருமலையில் 75,353 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 75,353 போ் தரிசித்தனா். 25,636 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தரிசனம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.திருமலை ஏழுமலையானை வழிபட வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவரை த... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க