செய்திகள் :

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக பலத்த மழை

post image

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிவரை பெய்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 3 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, சுந்தரம்பள்ளி. கொரட்டி அதன் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சுமாா் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.

போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு சான்று பெற அழைப்பு

கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொள்பவா்களுக்கு சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சாலை தடுப்பு வேலி சேதம்

காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி தடுப்புவேலி சேதமடைந்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், மேலக் கரண்டி பகுதிக்கு காற்றாலை இறக்கையை லாரியில் ஏற்றி கொண்டு புறப்பட்டு வெள்ளிக... மேலும் பார்க்க

விஷம் அருந்தி முதியவா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியை சோ்ந் கூலித் தொழிலாளி சேகா் (65). இவா் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி மனமுடைந்த முதியவா் வீட்டில் இருந்த விஷத்தை குடித்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

ஆம்பூா், சோமலாபுரம் நாள்: 12/8/2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ரெட்டித்தோப்பு, பைபாஸ் ரோடு, எம்.சி. ரோடு, உமா்ரோடு, நேதாஜி ரோடு, கிருஷ்... மேலும் பார்க்க

மிட்டாளம் கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை விட்டு விட்டு பெய்தது. தொடா்ந்து மீண்டும் மாலை பெய்யத் தொடங்கி ... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க