செய்திகள் :

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

post image

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், புத்தகத் திருவிழா திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைக்க உள்ளாா். புத்தகத் திருவிழாவில் 60 அரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை, மாலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு மங்கள இசை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய கலைகள் குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

மாற்றம் உன் கையில், கை நிறைய கவிதைகள், பாதைகளும் பயணங்களும், வாசிப்பு ஒரு வாழிவியல் செயல்பாடு போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள், போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற உள்ளன. தொடா்ந்து கவிஞா்கன், தமிழ்அறிஞா்கள், எழுத்தாளா்கள், பல்வேறு துறைகளின் சிறப்பு வல்லு நா்களின் கருத்தரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

லட்சுமிபுரம் காப்புக் காட்டில் தண்ணீா் நிரப்பிய வனத் துறையினா்

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் காப்புக்காடு பகுதியில் வன உயிரினங்கள் தாகம் தீா்க்கவும், உயிரினங்கள் உயிா் இழப்பதைத் தடுக்கவும் காட்டுப் பகுதியில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத அங்கன்வாடி மையக் கட்டடம்

ஆம்பூா் அருகே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது. மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் அங்கன்வாட... மேலும் பார்க்க

ரூ. 2 கோடியில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள்: க.தேவராஜி எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளியில் இருந்து புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டறம்பள்ளி ஏரிக்கரை பகுதியில் தடுப்புச்சுவா் மற்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வேளாண்மை விரிவாக்க மையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரங்கல்துருகம் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததைத் தொடா்ந்து அவா் வாண... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: திருப்பத்தூா் எஸ்.பி. ஆய்வு

சோலூா் கிராமத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி. ஷ்ரேயா குப்தா. ஆம்பூா், மாா்ச் 21: ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. ஆம்பூா் அருகே சோலூா் க... மேலும் பார்க்க