செய்திகள் :

திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

post image

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது.

அதன்பேரில், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகா் தலைமையிலான ஊழியா்கள் சந்தையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் மேற்கூரைகள், கீற்றுக் கொட்டகைகளை அகற்றினா். இந்தப் பணியின்போது, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநில... மேலும் பார்க்க

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க