செய்திகள் :

`திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை’ - கிணற்றில் சடலமாக கிடந்த இளம்பெண்; சரணடைந்த காதலன்; நடந்தது என்ன?

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகேயுள்ள பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் 22 வயது மகள் ரோஷினி. கல்லூரி படிப்பை முடித்த ரோஷினி காவல்துறை பணியில் சேர விருப்பப்பட்டு, கலசப்பாக்கம் அருகில் விண்ணுவாம்பட்டு பகுதியிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து உடற்திறன் தேர்வு குறித்து பயிற்சி பெற்றுவந்தார். கலசப்பாக்கம் அருகிலுள்ள அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் சக்திவேல் (29) என்பவரும், இதே மையத்தில் பயின்றுவந்தார். பயிற்சி மையத்தில் சந்திக்கும்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேசி பழகியதில் இருவரும் காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக சமீப நாள்களாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சக்திவேலிடம் இருந்து ரோஷினி விலகிச் செல்ல முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரோஷினி

அதன் பிறகு, பயிற்சி மையத்தில் சந்திக்கும்போதும் சக்திவேலிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் ரோஷினி. இந்த நிலையில்தான் வழக்கம்போல் நேற்று முன்தினம் பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு, இரவு 7 மணியளவில் வீடு திரும்பிகொண்டிருந்தார் ரோஷினி. பாடகம் - மன்சூராபாத் சாலையில் ரோஷினியை மறித்த சக்திவேல் அவரிடம் மீண்டும் காதலிக்க வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பிறகு ரோஷினி வீடு திரும்பவில்லை. 9 மணியாகியும் மகள் வீடு வந்து சேராததால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். மங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றும் உடனடியாக புகாரளித்தனர்.

இதற்கிடையே, சக்திவேல் நள்ளிரவில் போளூர் காவல் நிலையத்துக்கு திடீரென சென்று சரணடைந்தார். ``தனது காதலி ரோஷினியின் சடலம் பாடகம் கிராமத்தில் உள்ள ஒரு விவகாய கிணற்றில் கிடக்கிறது. நாங்கள் இருவரும் காதலித்துவந்தோம். ஆனாலும், ரோஷினிக்கு திருமணம் செய்துவைக்க அவளின் பெற்றோர் வரன் பார்த்துவந்தனர். எனக்குத் தெரியவந்ததும் சம்பவத்தன்று இரவு சந்தித்து சமாதானம் பேச முயன்றதோடு, `நாம் திருமணம் செய்துகொள்ளலாம்’ எனவும் வற்புறுத்தினேன். அவள் சம்மதிக்க மறுத்ததால் கோபப்பட்டு கன்னத்தில் அறைந்தேன். அவள் உணர்ச்சிவசப்பட்டு அருகிலுள்ள கிணற்றில் குதித்துவிட்டாள்’’ என்று கூறியிருக்கிறார். போலீஸாரும் திடுக்கிட்டு, மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சக்திவேல்

நேற்று விடிந்ததும், போலீஸார் அந்த கிணற்றுப் பகுதிக்கு விரைந்தனர். தகவலறிந்ததும் ரோஷினியின் குடும்பத்தினரும், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து கதறி அழுதனர். ரோஷினியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டுவந்தபோது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சரணடைந்த சக்திவேல், ரோஷினியே கிணற்றில் குதித்துவிட்டதாக கூறியிருந்தார். ஆனால், ரோஷினியின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கழுத்தையும் பலமாக நெரித்ததைபோல் தடயங்கள் காணப்பட்டன.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான காரணத்தை உறுதியாக கூறமுடியும் என்கின்றனர் போலீஸார். அதே சமயம், சக்திவேலையும் கைது செய்த போலீஸார் அவரிடம் உண்மை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க