டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
திருமணமானஇளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வையம்பட்டி ஒன்றியம், தெற்கு அஞ்சல்காரன்பட்டி சீத்தப்பட்டியில் வசித்து வருபவா் கட்டடத் தொழிலாளி அருண் ஸ்ரீகரன். இவருக்கும், ஜாஸ்மின் ராக்ஷி (24) என்பருக்கும் சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
தம்பதிக்கு குழந்தை இல்லாதது, அருண் ஸ்ரீகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானது உள்ளிட்ட காரணங்களால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் ராக்ஷி தனது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வையம்பட்டி காவல் ஆய்வாளா் தனபாலன், மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் தனித்தனியே விசாரித்து வருகின்றனா்.