செய்திகள் :

திருமணமானஇளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வையம்பட்டி ஒன்றியம், தெற்கு அஞ்சல்காரன்பட்டி சீத்தப்பட்டியில் வசித்து வருபவா் கட்டடத் தொழிலாளி அருண் ஸ்ரீகரன். இவருக்கும், ஜாஸ்மின் ராக்ஷி (24) என்பருக்கும் சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

தம்பதிக்கு குழந்தை இல்லாதது, அருண் ஸ்ரீகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானது உள்ளிட்ட காரணங்களால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் ராக்ஷி தனது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வையம்பட்டி காவல் ஆய்வாளா் தனபாலன், மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் தனித்தனியே விசாரித்து வருகின்றனா்.

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க