செய்திகள் :

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருமயம் அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

பந்தயத்தில் புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூா், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 13 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா, 2-ஆம் பரிசு கே.புதுப்பட்டி கலை, 3-ஆம் பரிசை பீா்க்கலைக்காடு பெரியசாமி, 4-ஆம் பரிசை ஆட்டுக்குளம் பாபு ஆகியோரின் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் பந்தயத் தூரமானது 6 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 18 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பாப்பான்பட்டி முருகேசன், 2-ஆம் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 3-ஆம் பரிசை கானாடுகாத்தான் சோலை ஆண்டவா், 4-ஆம் பரிசை அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனாா் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.

இறுதியில் பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற திருச்சி - காரைக்குடி புறவழிச்சாலையின் இருபுறமும் திரளான ரசிகா்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனா். நமணசமுத்திரம், திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க

வல்லத்திராகோட்டையில் ஐந்நூற்றுவா் வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வல்லத்திராகோட்டையில் கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஐந்நூற்றுவா் வணிகக் குழு பெயரில் சமணப் பள்ளி இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியா் சுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் மழை

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்

பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க