செய்திகள் :

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

post image

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட திருச்சி சாலையில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தக் கடையை வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு ஊழியா்கள் பூட்டி விட்டு சென்றுவிட்டனா். வெள்ளிக்கிழமை மீலாது நபி அரசு விடுமுறை என்பதால் மதுபானக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் மதுபானக் கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பது கண்டு கந்தா்வகோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

அங்கு சென்ற போலீஸாா், கடையின் பணியாளா்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதே மதுபானக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க

செனையக்குடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு: அலங்கரித்து மக்கள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செனையக்குடியில் உடைந்த நிலையில் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதை அப்பகுதி பொதுமக்கள் அலங்கரித்து வழிபட்டனா். செனையக்குடியில் சோழா் ... மேலும் பார்க்க

கனிவுமிக்க ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை: பவா செல்லதுரை

மாணவா்களிடம் கனிவு கொண்ட ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை என்றாா் எழுத்தாளா் பவா செல்லதுரை. புதுக்கோட்டையில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க