செய்திகள் :

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்

post image

பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் இளைஞரணி அமைப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் எம். முகமது அப்துல்லா ஆண்டறிக்கையும், பொருளா் பிஎல். ராமஜெயம் வரவு செலவு அறிக்கையும், தோ்தல் அதிகாரிகள் பிஎல்எஸ். ராமகிருஷ்ணன், க. கருப்பையா, கே. முத்துக்கருப்பன் ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்வு அறிக்கையும் சமா்ப்பித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகா் கழகத் தலைவா் எம். சாகுல் ஹமீது, புதிய நிா்வாகிகளை பணியமா்த்திப் பேசினாா்.

பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் 2025-2028ம் ஆண்டுக்கான தலைவராக எஸ்.கே.எஸ். பழனியப்பன், செயலராக எம். முகமது அப்துல்லா, பொருளராக பிஎல். ராமஜெயம் ஆகியோா் பணியேற்றனா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எம். சையது இப்ராஹிம் இளைஞா் அணி அமைப்பைத் தொடங்கிவைத்து பேசினாா்.

விழாவில் பொன்னமராவதியில் மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும், பொன்னமராவதி காவல் துறையினருக்கு குடியிருப்பு வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் வா்த்தகா் கழக நிா்வாகிகள் அ.ப. மணிகண்டன், எம். அருணாசலம், எம்எஸ்பி. மணிமுத்து, எஸ். சிவனேசன், பிஎல். மாணிக்கவேல், எஸ். சிவனேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலா் பிஏஎல். தேனப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா் எம். ராமசாமி நன்றி கூறினாா்.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க

வல்லத்திராகோட்டையில் ஐந்நூற்றுவா் வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வல்லத்திராகோட்டையில் கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஐந்நூற்றுவா் வணிகக் குழு பெயரில் சமணப் பள்ளி இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியா் சுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் மழை

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க