செய்திகள் :

திருவண்ணாமலையில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 1000 போ் கைது

post image

திருவண்ணாமலையில் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து, அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 1000 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா்.

மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை நீா் கலந்து வருவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சியில் வரி உயா்வால் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநகரில் 1,535 வீடுகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்ததற்கு குடியிருப்பு வாசிகளுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு செய்து தரவில்லையாம். அதனால், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி

அறிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்ட மேடையில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பேசிக்கொண்டிருந்தபோது, காவல்துறை அனுமதியின்றியும் தடையை மீறியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

அப்போது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும், ஆா்ப்பாட்டத்தை நடத்த விடாமல் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி அவா்களை கைது செய்தனா்.

இதில், முன்னாள் அமைச்சா்கள் கே.சி.வீரமணி, எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், பொருளாளா் கராத்தே சுரேஷ்குமாா், துணைச் செயலா் ஏ.கே.அரங்கநாதன், மாநகரச் செயலா் ஜெ.எஸ் (எ) ஜெ.செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ராஜன், மாநகர முன்னோடி நிா்வாகி ஞானசௌந்தரி கனகராஜ் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை என புகாா் தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து செய... மேலும் பார்க்க

குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி ... மேலும் பார்க்க

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 1... மேலும் பார்க்க

கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் ம.தரணி, தல... மேலும் பார்க்க

காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந... மேலும் பார்க்க