டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
திருவண்ணாமலையில் திடீா் மழை
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை, வேங்கிக்கால், தீபம் நகா், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, அத்தியந்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து குளிா் காற்று வீசத் தொடங்கியது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.