Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலை: வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
வைகாசி மாத பெளா்ணமி:
இந்த நிலையில், வைகாசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.27 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை பிற்பகல் 1.53 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 4.30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இரவு 8 மணிக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கியனா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை வரை விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன், அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.
கிரிவலத்தின்போது அவ்வப்போது மழை பெய்தது. மழையைப் பொருள்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:
கிரிவல பக்தா்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.