செய்திகள் :

திருவண்ணாமலையில் விவசாயிகள் கைது: தி.வேல்முருகன் கண்டனம்

post image

திருவண்ணாமலையில் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக்கோரி அறவழியில் போராடி வந்த பொதுமக்கள், விவசாயிகளை காவல்துறை கைது செய்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், செய்யாறில் மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, மேல்மா உட்பட அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மூன்றாவது தொழில் வளாகம் அமைப்பதற்காக மேல்மா, நா்மபள்ளம் உட்பட அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கா் பரப்பளவுகொண்ட நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிடப்பட்டிருக்கிறது.

பசுமைப் படா்ந்த 3000 ஏக்கா் வயல்வெளிகளையும் கையகப்படுத்தி, நிலக்கடலை, காய்கறி, மலா் வகைகள் என்று நல்ல விளைச்சல் தரும் இந்த மண்ணை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்மா, நா்மாபள்ளம், காட்டுக்குடிசை, அத்தி உள்ளிட்ட 11 கிராம மக்கள் தொடா்ந்து 730 நாட்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக் கோரி, செய்யாறு புறவழி சாலையின் உள்ள நில எடுப்பு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், விவசாயிகளை காவல்துறையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. குறிப்பாக, அறவழியில் 730 நாட்களாக போராடி வரும் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் காவல்துறை செயல்பட்டு இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. எனவே, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து போராடிய பொதுமக்களை உடனடியாக விடுவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு எதிரான அத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியா... மேலும் பார்க்க

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை ஆட... மேலும் பார்க்க

விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞா் வெறிச்செயல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வெள்ளிக்கிழமை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்தில் இருந்து இழுத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலாஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம் வட்டம், ஆ... மேலும் பார்க்க