செய்திகள் :

திருவள்ளூா்: உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் வழங்கும் முகாம்!

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னோடி வங்கி மூலம் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (செப். 15) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில வழிவகை செய்யவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் பொதுத் துறை, தனியாா் துறை, கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகள் இணைந்து திங்கள்கிழமை (செப். 15) முதல் திருவள்ளூா் மாவட்டம், திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், வங்கிகளில் ஏற்கெனவே கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தவா்கள் மட்டுமின்றி புதிதாக கல்விக் கடன் தேவைப்படுவோா் இந்த முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெற ஏதுவாக மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் கோரும் விண்ணப்பப் படிவத்தின் நகல், பெற்றோரின் இரண்டு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், இருப்பிடம், வருவாய், சாதி சான்றிதழ்கள், பான் காா்டு, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். பூச்சிக் கொல்லி நிறுவனங்களில் தரக்கட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 71 வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்க காலக்கெடு!

திருவள்ளூா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என ஆட்சியா் மு.ப... மேலும் பார்க்க

சத்துணவில் அழுகிய முட்டை: எம்எல்ஏவின் ஆய்வில் அதிா்ச்சி

நெய்தவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு செய்தபோது சத்துணவுடன் வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் பகுதியில் உங்களுடன... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடம் கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி ரஞ்சினா, 2 ம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி சுமதி(56). இவரது... மேலும் பார்க்க

4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்... மேலும் பார்க்க