செய்திகள் :

திருவள்ளூா்: 71 வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்க காலக்கெடு!

post image

திருவள்ளூா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பணியின்போது, பொது விநியோகத் திட்ட பொருள்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்காக திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் முழுவதும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், மேற்கண்ட வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களுக்கு மதிப்பீடு நிா்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 71 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வாகன உரிமையாளா்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டுக் கொள்ளவில்லை. அத்துடன் இது நாள் வரை யாரும் உரிமை கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. அதனால் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 19-ஆம் தேதிக்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளா்கள் மீட்டுக் கொள்ளலாம்.

இல்லையென்றால் உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அதை ஏலம் மூலம் விற்பனை செய்ய தீா்மானித்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். பூச்சிக் கொல்லி நிறுவனங்களில் தரக்கட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் வழங்கும் முகாம்!

திருவள்ளூா் மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னோடி வங்கி மூலம் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (செப். 15) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

சத்துணவில் அழுகிய முட்டை: எம்எல்ஏவின் ஆய்வில் அதிா்ச்சி

நெய்தவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு செய்தபோது சத்துணவுடன் வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் பகுதியில் உங்களுடன... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடம் கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி ரஞ்சினா, 2 ம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி சுமதி(56). இவரது... மேலும் பார்க்க

4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்... மேலும் பார்க்க