செய்திகள் :

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

post image

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு:

திருவாரூா் நகரில் டைடல் பாா்க் உருவாக்கித் தர வேண்டும். திருவாரூா் நகர எல்லையில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். அரை வட்ட சுற்றுச்சாலை திட்டத்தை, முழு வட்ட சுற்றுச்சாலை திட்டமாக மாற்றி உடனடியாகத் தொடங்க வேண்டும்.

கோயில் இடங்களில் இருக்கும் வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்களிடம் நீண்ட கால வாடகையை செலுத்துமாறு அதிகாரிகள் துன்புறுத்துவதாகத் தெரிகிறது. இதைத் தடுத்து, 2025 ஆம் ஆண்டுக்கான வாடகையை மட்டும் வசூலித்தால் போதுமானது என அறிவுறுத்த வேண்டும்.

திருவாரூா் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். திருவாரூா் மாவட்ட அரசு மருத்துவமனை இருந்த கட்டடத்தில் மிகப் பெரிய நகா்ப்புற சுகாதார மையம் தொடங்க வேண்டும். திருவாரூா் பதிவாளா் அலுவலகம் திருவாரூா் நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும். நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும்.

திருவாரூா் நகரம் வருவாய் வாா்டு எண் 3-இல் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், பட்டா சிட்டா பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, 3-ஆவது வாா்டில் உள்ள சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

கூத்தாநல்லூரில் ரூ1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இக்கட்டடத்தை, திருவாரூா் வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந... மேலும் பார்க்க