செய்திகள் :

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

post image

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மன்னாா்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிக்காக ரூ. 1.25 கோடியில் மாவட்டத்திலேயே முதல்முறையாக புதிதாக ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொற்று நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை,ெ ஹச்ஐவி, காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கும்,

தொற்று இல்லாத நோய்களான நீரிழிவு, உப்பு, கொழுப்பு, முடக்குவாதம், முதுதண்டு திரவம், ரத்தத்தில் வெள்ளை, சிகப்பு அணுக்களின் அளவு, தைராய்ட் உள்ளிட்ட நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டும்.

இந்த புதிய ஆய்வகத்தை திருவாரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொணட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இதையடுத்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை மருத்துவா் என். விஜயகுமாா், நுண்ணுயிரியல் பிரிவு மருத்துவா் முத்தரசி, நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம் உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். தொடா்ந்து, நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடங்கின.

உள்ளிக்கோட்டையில் உள்ள கிளை நூலகத்தில் வசதியை மேம்படுத்தும் வகையில் ரூ. 22 லட்சத்தில் கணினி வசதியுடன் கூடிய புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டது. இதையும் தமிழக முதல்வா் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

புதிய நூலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன்,நூ லகா்கள் பானுமதி (உள்ளிக்கோட்டை), செல்வகுமாா் (மன்னாா்குடி) முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

கூத்தாநல்லூரில் ரூ1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இக்கட்டடத்தை, திருவாரூா் வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந... மேலும் பார்க்க