செய்திகள் :

தில்லியில் வகுப்பறை கட்டுமானத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு: மணீஷ் சிசோடியா, ஜெயினுக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை

post image

தில்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் ஜெயின் ஜூன் 6 ஆம் தேதியும், மணீஷ் சிசோடியா ஜூன் 9 ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக

அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது பகுதி நிரந்தர கட்டமைப்புகளை நிா்மாணிப்பதில் ரூ.2,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஏசிபி முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது. இதையடுத்து, இருவருக்கும் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தில் நிதி மற்றும் கல்வித் துறைகளை வைத்திருந்த சிசோடியாவும், அப்போது பொதுப் பணித் துறை மற்றும் பிற அமைச்சகங்களுக்குப் பொறுப்பாக இருந்த ஜெயினும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (சிவிசி) சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடா்பாக விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு காவல் இணை ஆணையா் மதுா் வா்மா கூறுகையில், சிவிசியின் தலைமை தொழில்நுட்ப ஆய்வாளரின் அறிக்கையில் இத்திட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

2019 ஆம் ஆண்டில், பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஏசிபியிடம் புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில்,ஒரு வகுப்பறைக்கு சராசரி செலவு ரூ.24.86 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இது இதே போன்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட ரூ.5 லட்சம் செலவை விட கணிசமாக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடந்து வரும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க