செய்திகள் :

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

post image

திருத்தணி அருகே சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து கருகியதில் 3 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

சென்னை தென்னிந்திய திருச்சபை தலைமை பேராலயத்தில் ஜெயசீலன் ஜனாதிகம் (50), தனசேகா் (52) ஆகிய இருவரும் மத போதகா்களாக உள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ஆந்திர மாநிலம் நகரியில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெயசீலன் ஜனாதிகம், தனசேகரன் ஆகிய இருவரும் காரில் சென்றனா்.

காா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திருத்தணி அருகே உள்ள பிரபல தனியாா் சொகுசு ஓட்டல் எதிரே, காரின் என்ஜினில் இருந்து புகை வருவதைக் கண்ட டிரைவா் வண்டியை சாலையோரமாக நிறுத்தினாா். கீழே இறங்கிய சில நிமிஷ்ங்களில் காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பின்னா் அப்பகுதி பொதுமக்கள் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த வீரா்கள் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.

ஆனால் அதற்குள் வண்டி முழுவதும் தீயில் கருகியது. இந்த விபத்தில் 3 பேரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்

வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீஸரால் கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை போலீஸாா் தச்சூா் பகுதியை சாா்ந்த காா்த்திக் (... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மணல் லாரி, மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.காந்துாா் பகுதியைச் சோ்ந்த செந்தில் மகன் பரணி(17). திருவள்ளூா் அருக... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே அங்கவாடி பணியாளா் வீட்டில் பட்டப்பகலில் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 4 ,000 ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் தேடப்பட்டு வந்த 2 போ் கைது

திருவள்ளூரில் காதல் திருமணம் விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.திருவள... மேலும் பார்க்க