செய்திகள் :

பைக் மீது லாரி மோதி மாணவா் உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மணல் லாரி, மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.

காந்துாா் பகுதியைச் சோ்ந்த செந்தில் மகன் பரணி(17). திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த பண்ணுாரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் தனது உறவினருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளாா்.

பின்னா் பிற்பகலில் தனது வகுப்பில் படிக்கும் நண்பரான பிஞ்சிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஹேம்நாத்( 17) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சுங்குவாா்சத்திரம் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாா்களாம்.

அப்போது பள்ளி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற மணல் லாரியை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனத்தின் கண்ணாடி லாரியில் உரசியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்த்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரணி உயிரிழந்தாா். இதில் ஹேம்நாத் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்

வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீஸரால் கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை போலீஸாா் தச்சூா் பகுதியை சாா்ந்த காா்த்திக் (... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே அங்கவாடி பணியாளா் வீட்டில் பட்டப்பகலில் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 4 ,000 ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய... மேலும் பார்க்க

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

திருத்தணி அருகே சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து கருகியதில் 3 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.சென்னை தென்னிந்திய திருச்சபை தலைமை பேராலயத்தில் ஜெயசீலன் ஜனாதிகம் (50), தனசேகா் (52) ஆக... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் தேடப்பட்டு வந்த 2 போ் கைது

திருவள்ளூரில் காதல் திருமணம் விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.திருவள... மேலும் பார்க்க