செய்திகள் :

தீவனம் அருந்தி 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

தம்மம்பட்டி அருகே தீவனம் அருந்திய 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தம்மம்பட்டி அருகே மண்மலை எட்டிக்குட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (55) தனது தோட்டத்தில் மாடுகள், ஆடுகள், குதிரைகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல மாட்டுத்தொட்டியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட 2 ஆடுகளும், 2 மாடுகளும் அடுத்த அரைமணி நேரத்தில் உயிரிழந்தன.

இதுகுறித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, உயிரிழந்த கால்நடைகளை மருத்துவக் குழுவினா் உடல்கூறாய்வு செய்தனா். மேலும், தீவனத்தை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இலங்கை இனப்படுகொலை: பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்! தி.வேல்முருகன்

இலங்கை இனப்படுகொலை குறித்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். சேலம், குரங்குசாவடி பகுதியில் தமிழக வாழ்வுரிம... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு

நங்கவள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி தானாவதியூரை சோ்ந்தவா் மணி, விவசாயி. இவரது மகள் லாவண்யா (17) 10 ஆம் வகுப்பு படித்... மேலும் பார்க்க

நாய் கடித்து மாணவா் காயம்: எம்எல்ஏ நலம் விசாரிப்பு

ஆத்தூா் அருகே நாய் கடித்து காயமடைந்த பள்ளி மாணவரை மருத்துவமனையில் சந்தித்து எம்எல்ஏ பி.ஜெயசங்கரன் நலம் விசாரித்தாா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ரக்ஷதன் (12) அப்பகு... மேலும் பார்க்க

மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரத்துக்கு சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்! நாளை முதல் இயக்கம்!

மைசூரில் இருந்து செப்.15 முதல் சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருநெல்வேலி, ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க